இறைவா!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம், உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம். (1:4... )

Mar 4, 2011

மொத்த வாக்காளர்கள் 4 கோடியே 60 லட்சம்



தமிழக சட்டசபை தேர்தலுக்கு 54 ஆயிரம் வாக்குசாவடிகள்:

மொத்த வாக்காளர்கள் 4 கோடியே 60 லட்சம்

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் உள்ள 32 மாவட்டங்களில் 234 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்த 234 தொகுதிகளிலும் 10-1-2011 அன்று வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியல்படி மொத்த வாக்காளர்கள் 4 கோடியே 59 லட்சத்து 50 ஆயிரத்து 620 பேர் உள்ளனர். இவர்களில் ஆண் வாக்காளர்கள் 2 கோடியே 30 லட்சத்து 86 ஆயிரத்து 295 பேர். பெண் வாக்காளர்கள் 2 கோடியே 28 லட்சத்து 63 ஆயிரத்து 481 பேர்.

தமிழகத்தில் பெரிய சட்டமன்ற தொகுதி சோழிங்கநல்லூர் ஆகும். இதன் வாக்காளர்கள் எண்ணிக்கை 3 லட்சத்து 40 ஆயிரத்து 615. சிறிய தொகுதியாக நாகப்பட்டினம் மாவட்டம் கீழ் வேலூர் உள்ளது.

இது தனித்தொகுதி ஆகும். இதில் 1 லட்சத்து 40 ஆயிரத்து 181 பேர் உள்ளனர். வேட்பு மனு தாக்கல் மார்ச் 19-ந் தேதி தொடங்குகிறது. மனுதாக்கல் செய்ய மார்ச் 26-ந் தேதி கடைசிநாள். வேட்பு மனுக்கள் பரிசீலனை 28-ந் தேதி நடக்கிறது.

வேட்புமனுவை திரும்ப பெற மார்ச் 30-ந் தேதி கடைசி நாள். அன்றுதான் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். தேர்தல் ஏப்ரல் மாதம் 13-ந் தேதி நடைபெற உள்ளது.

வாக்குகள் எண்ணிக்கை மே 13-ந்தேதி நடைபெற இருக்கிறது. தேர்தல் பணி மே 16-ந் தேதி முடிந்துவிடும். தமிழகத்தில் 54 ஆயிரத்து 16 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. இவற்றில் 19 ஆயிரத்து 560 வாக்குச்சாவடிகள் நகர்ப்புற பகுதிகளிலும் 36 ஆயிரத்து 456 வாக்குச்சாவடிகள் கிராமப்புற பகுதிகளிலும் அமைந்துள்ளன.

புகைப்பட வாக்காளர் பட்டியல் 99.85 சதவீதம் உள்ளது. தேர்தல் பணிக்காக ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், போலீசார் உள்பட மொத்தம் 2 லட்சத்து 76 ஆயிரத்து 519 பேர் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

இந்த தேர்தலுக்காக மின்னணு வாக்கு எந்திரம் பயன்படுத்தப்பட உள்ளது. அதற்காக 70 ஆயிரத்து 4 கட்டுப்பாட்டு எந்திரங்களும் 98 ஆயிரம் வாக்குப்பதிவு எந்திரங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு பிரவீண்குமார் கூறினார்
Thanks :- mangudi kani