இறைவா!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம், உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம். (1:4... )

Jan 7, 2011

இந்திய விடுதலைப் போரில் முஸலிம்கள் பங்கு

நேதாஜியின் தேசிய இராணுவத்தில் பணியாற்றிய தமிழர்கள்
1973ம் ஆண்டு தமிழக அரசு புத்தகம் ஒன்றை வெளியிட்டது.அப்பட்டியலில் 25% மேற்பட்ட முஸலிம்கள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களின் விபரம் வருமாறு:

1. பள்ளப்பட்டி மனிமொழி மவ்லானா
2. இராஜகிரி அப்துல்லா
3. இளையான்குடி கரீம் கனி
4. திருப்பத்தூர் அபூபக்கர்
5. திருப்பத்தூர் தாஜிதீன்
6. அத்தியூத்து அபூபக்கர்
7. பக்கரி பாளையம் அனுமன் கான்
8. சென்னை அமீர் ஹம்சா
9. சென்னை ஹமீது
10. செங்குன்றம் கனி
11. வண்ணாரப்பேட்டை ஹயாத்கான்
12. புதுவலசை இபுராஹிம்
13. பார்த்திபனூர் இபுராஹிம்
14. வனரங்குடி இபுராஹிம்
15. இளையான்குடி அப்துல் கபூர்
16. மேலூர் அப்துல் ஹமீது
17. சோழசக்கர நல்லூர் அப்துல் ஜப்பார்
18. தத்தனனூர் அப்துல் காதர்
19. பட்டுக்கோட்டை அப்துல் காதர்
20. திருப்பூர் அப்துர் ரஜாக்
21. காவிரிப்பட்டினம் அப்துல் மஜித்
22. குருவம் பள்ளி அப்துல் மஜீத்
23. கண்ணாத்தாள் பட்டி அப்துல் முத்தலிபு
24. லெப்பைக் குடிகாடு அப்துல் சலாம்
25. ராம்நாடு அப்துல் வஹாப்
26. மானாமதுரை அப்துல் பாசித்
27. திரிவிடைச் சேரி அப்துல் வஹிப்
28. அத்தியூத்து இபுராஹிம்
29. சென்னை ஜாபர் ஹக்கிமி
30. சிங்கம் மங்களம் ஜெய்னுல் ஆபிதீன்
31. திருப்பத்தூர் காதர் பாட்ஷா
32. புதுவலசை முஹம்மது லால் கான்
33. பார்த்திபனூர் கச்சி மைதீன்
34. தஞ்சை முஹம்மது தாவூது
35. அறந்தாங்கி முஹம்மதுசெரிபு
36. திருச்சி வரகனேரி முஹம்மது சுல்தான்
37. வடபழனி சென்னை முஹம்மது யூசுப்
38. தூத்துக்குடி முஹம்மது கல்லுரிஜனி
39. சிவகங்கை முஹம்மது இபுராஹிம்
40. சென்னை முஹம்மது உமர்
41. மதுரை மொய்தீன் பிச்சை
42. அம்மன்சத்திரம் முஹம்மது மீராசா
43. திருப்பத்தூர் பீர் முஹம்மது
44. கும்பகோணம் ரஹ்மத்துல்லா
45. குடியத்தம் நஜீமுல்லாஹ்
46. கிருஷ்ணகிரி தாவூத் ஷாயிபு
47. இராமநாதபுரம் சையது கனி
48. பரகப்பேட்டை தாஜிதீன்
49. மன்னர்குடி சிக்கந்தர்
50. கம்பம் சிக்கந்தர்
51. முதுகுளத்தூர் சுல்தான்
52. கும்பகோணம் சுல்தான்
53. இராமநாதபுரம் தாஜிதீன்

காந்திஜி நடத்திய அஹிம்சைப் போராட்டத்தில் கலந்து கொண்ட முஸ்லிம்கள்

1. காதிர் முஹைத்தீன் மரைக்காயர்
(பர்மா, கிலாபாத், ஒத்துழையாமை)
2. மி.இ. முஹம்மது அப்துல் காதர் சாஹிபு தென்காசி
(கிலாபத், அந்நியத் துணி எரிப்பு, ஒத்துழையாமை இயக்கம்)
3. அப்துல் ஹமீதுகான் 1932ல் சென்னை மேயராக பணியாற்றியவர்
(சுதந்திரப் போராட்டத்திற்காக சென்னை சட்டசபையில் குரல் கொடுத்தார்.)
4. முகமதலி சேலம்
(கள்ளுக்கடை மறியல்)
5. பி.என். அப்துல் கபீர் தாராபுரம்
(வில்லுப்பாட்டு மூலம் தேசப் பற்றை வளர்த்தார், கிலாபத்திலும் கலந்து கொண்டார்)
6. பண்டிட் அப்துல் மஜீத் பளைக்குளம் (கிலாபத்)
7. கலிபுல்லாஹ் திருச்சி (கிலாபத்)
8. நூர்மல் சென்னை
(பகத்சிங் படத்தை அடையில் வைத்து விற்றதாக கைது செய்யப்பட்டு,
18-1 சட்டப்படி வழக்குத் தொடரப்பட்டது.)
9. அப்துல் ஹமீது
10. மௌலானா அப்துல் காதர்

இந்திய விடுதலைப் போரில் உலமாக்களின் பங்கு
இந்திய விடுதலைப் போரில் உலமாக்களின் பங்கு குறிப்பிடத்தக்கது. இந்திய விடுதலைப் போரில் தங்கள் வழிபாட்டுத் தலங்களைக் கூட வெள்ளையனுக்கு எதிராகப் பயன்படுத்திய ஒரு சமுதாயம் உண்டென்றால், அது இஸ்லாமிய சமுதாயம்தான்.
வெள்ளிக் கிழமை ஜூம்மா மேடைகள் எல்லாம் வெள்ளையனுக்கு எதிராக போர்ப் பரணி பாடின.. ஜூம்மா மேடைகளில் உரமேற்றியதன் விளைவு வீரத்துடன் இந்த சமுதாயம் வெள்ளையனை எதிர்த்துப் போராடியது. வெள்ளையனின் உடை கலாச்சாரம், மொழி போன்றவை ஹராம் என பத்வாக்கள் அளித்தனர். வெள்ளையனின் அதிகார வரம்புக்கு உட்பட்ட நிலப்பரப்புகள் யுத்த பூமி (தாருல் ஹர்டி) என்பது போன்ற பத்வாக்கள் வழங்கப்பட்டன.19ஆம் நூற்றாண்டின் மிக முக்கிய இஸ்லாமிய அறிஞராகத் திகழ்ந்த மௌலவி காசிம் அஹ்மத் நாளோத்வி 1885ல் இந்திய தேசிய காங்கிரஸில் முஸ் ம்கள் உறுப்பினராகச் சேர வேண்டும் என்று தீவிரமாகப் பிரச்சாரம் செய்தார். வெள்ளையனை நாட்டை விட்டு விரட்டுவது மார்க்கக் கடமை என்ற அடிப்படையில் நூற்றுக்கும் மேற்பட்ட பத்வாக்களை (மார்க்கத் தீர்ப்புக்களை) திரட்டி நுஸ்ரத்தூல் அஹ்ரார் (விடுதலைப் போராட்ட வீரர்களுக்கான உதவி) என்ற பெயரில் நூல் ஒன்றையும் வெளியிட்டார்.
கப்பல் ஓட்டிய தமிழன் வா.உ.சி. லி கப்பல் வாங்கியதற்கு உதவிய தமிழன்
அன்றைய வெள்ளையனின் கடல் ஆளுகையை எதிர்த்து சுதேசிக் கப்பல் விடுவதற்கு ஒரு டிரஸ்ட் அமைக்கப்பட்டது. கப்பல் வாங்குவதற்கு அன்றைய இந்திய நாளிதழில் பாராதியார் விளம்பரம் போட்டதற்கு வந்ததோ சில நூறு ரூபாய்களும், சில அனாக்களும்தான். ஆனால் கப்பலை வாங்குவதற்கு அன்றைய மதிப்பில் ரூ. 10 லட்சம் வழங்கிய ஹாஜி பக்கீர் முஹம்மதுவை மறந்து விட்டார்களா? இல்லை வேண்டும் என்றே மறைத்துவிட்டார்களா?
மாப்பிளா மார்கள் போராட்டம்
1921ல் வெள்ளையனுக்கு எதிராக கிலாபத் இயக்கம் கண்ட 100க்கும் அதிகமான மாப்பிளாமார்கள் கேரளாவின் திரலிருந்து ஏற்றி கோயம்புத்தூருக்கு கூட்ஸ் வண்டியில் அடைக்கப்பட்டு அனுப்பி கொல்லப்பட்டாகளே! அவர்கள் அடக்கஸ்தலங்கள் இன்று கோவை ரயில் நிலையில் அருகில் அவர்களின் வரலாற்றைச் சொல்லும் விதமாக உள்ளதே இதை எப்படி மறந்தீர்கள் (மறைத்தீர்கள்!)காந்திஜி அழைப்பு விடுத்த கள்ளுக்கடை போராட்டத்திற்கு மதுரையில் கைதான 19பேரில் 10 முஸலிம்கள் தங்களின் 13 சதவிகிதத்தையும் தாண்டி, 50 சதவிகிதத்திற்கு அதிகமாகப் பங்கு கொண்டுள்ளனர் என்று குறிப்பிடத்தக்கது.
பேகம் ஹஜ்ரத் மஹல்
டெல்லியை ஆண்ட ஹஜ்ரத் பேகம் ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடிய முஸ்லிம் பெண்மணியாவார். அவருக்கு அன்றைய ஆட்சியிலிருந்த எந்த ஒரு இந்து மன்னனும் உதவவாததால், தன் நாட்டை இழந்து இமயத்தின் அடிவாரக் காடுகளில் தன் பத்து வயது மகனுடன் அநாதையாய் அலைந்து, வீர மரணம் அடைந்தாள் அந்த வீரத்தாய்! இதை எப்படி மறந்தார்கர்கள்? (மறைத்தார்கள்!)

No comments:

Post a Comment