இறைவா!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம், உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம். (1:4... )

Jul 26, 2010

சுவர்க்குத்துப் பெண்களின் தலைவி

Women In Islam: சுவர்க்குத்துப் பெண்களின் தலைவி

சுவர்க்குத்துப் பெண்களின் தலைவி
Share
ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கி றார்கள்: இறை தூதரின் மரணத்திற்கு முன்னர் ஒருநாள் நாங்கள் இருவரும் ஒன்றாக அமர்ந்திருந்தோம். பாத்திமா (ரழி) அவர்கள் அங்கு வருகை தந்தார். பாத்திமா (ரழி) நடந்து வருவதைப் பார்த்தால் இறைதூதர் (ஸல்) அவர்கள் நடந்து வருவதைப் போலவே இருக்கும்......


பாத்திமாவைக் கண்டதும் வாஞ்சையோடு வரவேற்ற இறைதூதர் தமது வலது பக்கத்தில் உட்கார வைத்துக் கொண்டார்கள். பாத்திமா வின் காதருகே சென்று ஏதோ கூறினார்கள். அதைக் கேட்ட மாத்திரத்திலேயே பாத்திமாவின் உதடுகள் துடித்து பொங்கி அழலானார்கள். பாத்திமா அழுவதைக் கண்ட இறைதூதர் மறுபடியும் காதருகே சென்று ஏதோ கூறினார்கள். அதைக் கேட்டவுடன் பாத்திமா சிரிக்கத் தொடங்கினார்.

இதைப் பார்த்துக் கொண்டு என்னால் சும்மா இருக்க முடியவில்லை. பாத்திமாவை அழைத்து என்ன நடந்தது? என்ன கூறினார்கள்? என்று கேட்டேன். ஒரே நேரத்தில் உங்களை அழ வைக் கும்படியாகவும் சிரிக்க வைக்கும்படியாகவும் அப்படியென்னதான் இறைதூதர் கூறினார்கள்? என்று கேட்டேன். அதை இப்போது என்னால் சொல்ல இயலாது என்று பாத்திமா கூற மறுத்துவிட்டார்.

இது நடந்து சில நாட்களுக்குப் பின் இறை தூதர் (ஸல்) மரணித்து விட்டார்கள். அதன்பின் மறுபடியும் ஒருநாள் பாத்திமாவிடம் இந்த நிகழ்ச்சியைக் குறிப்பிட்டு காரணத்தைக் கேட்டேன்.

"இப்போது என் அருமைத் தந்தையார் மரணித்துவிட்டார்கள். எனவே, தயங்காமல் சொல்ல முடியும். முதலில் தந்தையார் என் காதில் கூறினார்கள், "எப்போதும் வருடத்தில் ஒரு முறை ரமழான் மாதத்தில் என்னை ஒருதடவை குர்ஆன் ஓதச் சொல்லி ஜிப்ரீல் (அலை) கேட்பார்கள். இந்த வருடம் இரண்டு தடவை ஓதச் சொல்லிக் கேட்டார்கள். இந்த வருடத் திற்குள் எனக்கு மரணம் வந்துவிடும் என்று நினைக்கிறேன். என் மரணத்தைத் தொடர்ந்து என் குடும்பத்திலிருந்து முதன்முதலில் என்னைச் சந்திக்கப்போவது நீதான்."

அதைக் கேட்டவுடன் எனக்கு துக்கம் பொங்கிக் கொண்டு வந்தது. தாங்க முடியாமல் தேம்பி அழலானேன். மறுபடியும் காதருகே வந்து "உலகப் பெண்களுக்கெல்லாம் சொர்க் கத்தின் தலைவியாக இருப்பதை நீ விரும்பவில் லையா?" என்று தந்தையார் கேட்டார்கள். அதைக் கேட்டவுடன் சந்தோசம் தாங்காமல் சிரிக்கலானேன்" என்று பாத்திமா (ரழி) அவர்கள் கூறினார்கள்.

இறை தூதர் மரணித்து சரியாக 06 மாதங் களின்பின் பாத்திமா (ரழி) வபாத்தானார்கள்.

No comments:

Post a Comment