-
சாதனை படைக்கப் பிறந்தவர்கள் . ஜாதகம் பார்ப்பதில்லை !
முதல்வானாய் இரு இயலாவிட்டால் முதல்வனோடு இரு !ஊக்குவிக்க ஆள் இருந்தால் இன்று ஊக்கு விற்பவன் கூட நாளை தேக்கு விற்பபான் .!வாழ்க்கை என்பது ஒரு மெழுகுவத்தி அல்ல,அது ஒரு அற்புதமான தீபம் . பிரகாசமாக அதை ஏரிக்கச் செய்து . அடுத்த தலைமுறையிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் .!திறமையானவர்கள் சந்தர்ப்த்திற்கு காத்திருப்பதில்லை அவர்களே சந்தர்ப்பதை உருவாக்குகிறார்கள் .!ஒரு முயற்சி நிறுத்தப்படும்போது தோல்வியாகிறது,தொடரப்படும்போது வெற்றியாகிறது .!நான்தான் செய்து முடித்தேன் என்று மார்தட்டிக் கொள்கிற ஒவ்வொரு காரியத்துக்கும் நம்மை அறியாமல் வேறொருவர் உந்து சக்தியாகவும் , மூலகாரணமாகவும் இருக்கிறார் .! விதியை நம்புபவன் எதையும் சாதிக்க மாட்டான் .!தனியாக இருக்கும்பொழுது சிந்தனையிலும்.கூட்டத்தில் இருக்கும்பொழுது வார்த்தையிலும் கவனமாக இருக்க வேண்டும் .!பிறரைச் சீர்திருத்தும் முயற்சியைவிட,தன்னை சீர்திருத்திக் கொள்வதே முதற்கடமை . ஒழுங்கு தவறிய இடத்தில் பயன் இருந்தாலும் மதிப்பு இல்லை .!பணத்தின் மிகப்பெரிய பயன்,அதை இல்லாதவர்களுக்கு கொடுத்து மகிழ்வதுதான் !மற்றவர்கள் முடியாது என்று நினைக்கிற ஒரு விஷ யத்தை முடித்துக் காட்டுவதுதான் , நல்ல தலைமைப் பண்பின் அடையாளம் .!உயர் பதவி என்பது நிரந்தர சிம்மாசனம் அல்ல . அது நமக்குச்சரிப்படாவிட்டால்,மற்றவர்களுக்கு இடம் தந்து விலகிவிடவேண்டும் .!உங்களிடம் பணி புரிகிறவர்களை,மரியாதையோடும்,கண்ணியத்தொடும் நடத்துங்கள்,அவர்கள்தான் உங்களின் மிகப்பெரிய சொத்து .!இயன்றவரை அனைவரிடமும் மென்மையாகப் பேசுங்கள் பணிவாக நடந்துகொள்ளுங்கள் .!நாளை என்பது மிக தாமதமாகும்.இன்று முதலே வாழ்க்கையைச் சிறப்பாக நடத்திக்காட்டுங்கள் . !இயன்றால் மரங்களை வளர்த்து இயற்கையை அழியாமல் காப்பாற்றுங்கள்.இயலாவிட்டால் இருக்கும் மரங்களை வெட்டாமல் உங்களை நீங்களே காப்பாற்றிக்கொள்ளுங்கள் !
இறைவா! என் நிலையையும் நினைப்பையும் சமப்படுத்துவாயாக. நீ நாடியிருந்தால் நிலையை உயர்த்து. ஒரு போதும் நினைப்பை உயர்த்தி விடாதே! M.முஹம்மது இஸ்மாயில்
|
அன்பு நண்பருக்கு வணக்கம் எனது படைப்புகள் பலவற்றை எனது அனுமதி இன்று உங்களின் பெயரில் இங்கு வெளியிட்டு இருக்கிறீர்கள் . விரைவில் அவற்றை நீக்கிவிடவும் . புரிதலுக்கு நன்றி .
ReplyDeleteநேசத்துடன்
பனித்துளி சங்கர்
http://www.panithulishankar.com