இறைவா!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம், உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம். (1:4... )

Aug 22, 2010

நண்பர்கள் சொல்லி கேட்டது

எதில் நிற்க்கிறோம் என்பதில் உருதியாயிரு...................
எதில் விழுகிறோம் என்பதில் கவனமாயிரு........................

கடுமையான உழைப்பைத் தவிர வெற்றிக்கு ரகசியம் வேறு இல்லை.................

விவாதத்தால் தீர்வு கிடைத்துவிடும் என்று சொல்ல முடியாது,
ஆனால் விவாதம் இல்லை என்றால் தீர்வு என்பதே கிடையாது.

எழுந்து நின்று பேசுவது மட்டுமல்ல வீரம்...............
பொருமையாக உர்க்காந்து கவனிப்பதும் தான்.

சரியான வழியை தெரிந்து அதில் நட்ப்பவன் மட்டுமல்ல.................... மற்றவர்களுக்கும் அந்த வழியை காட்டுபவனே மனிதன்..........................

நிதானம் இழக்காமல் அமைதியாக இருக்க முயல்வது என்பதும்
நிதானம் இழக்காமல் அமைதியாக இருப்பதும் ஒன்றல்ல!!!

பயம் கதவை தட்டுகிறதா?
தைரியத்தை எழுந்து போய் கதவை திரக்க சொல்லுங்கள்

கல்மனம் படைத்த நண்பர்களை விட
கொலைகாரன் ஒன்றும் கொடியவனல்ல

மனிதனை எது அடிமையாக்குகிறதோ,
அது அவன் தகுதியில் பாதியை அழித்து விடுகிறது

தன்னை அறிந்தவன் ”ஆசை" படமாட்டான்...
உலகை அறிந்தவன் ”கோப" படமாட்டான்....
இதை இரண்டையும் உணர்ந்தவன் ”கஷ்டப்" படமாட்டான்

பணம் மட்டுமே வாழ்வாகி போன இவ்வுலகத்தில்
இன்று நாணயமும் நல்ல குணங்களும் நடை பிணமாய்
மாண்புள்ள மனிதனுக்கு கொடுக்காத மதிப்பை
கேவலம் துப்பு கெட்டு துட்டுக்கு கொடுகிறார்களே !!

நாளை விடியுமென்று விண்ணை நம்பும்போது
நம்மால் முடியுமென்று உன்னை நம்பு!

அதிகம் பணம் இருந்தால் உன்னை உனக்கு தெரியாது
அந்த பணம் உன்னிடம் இல்லையென்றால் உன்னை உலகத்திற்க்கு தெறியாது

நீ என்னிடம் பேசியதை விட
எனக்காகப் பேசியதில்தான் உணர்ந்தேன் நமக்கான நட்பை

உன்னை அதிகமாக சந்தோஷப்படுத்தும் இதயத்திற்கு
உன்னை அழவைக்கவும் உரிமை உண்டு

No comments:

Post a Comment