இறைவா!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம், உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம். (1:4... )

Aug 25, 2010

குழந்தைகளிடம் தன்னம்பிக்கை.........




குழந்தைகளிடம் வளர வேண்டியதும், வளர்க்கப்பட வேண்டியதும் தன்னம்பிக்கை. சிறுவயதில் ஊன்றப்படுகின்ற தன்னம்பிக்கை வித்துதான், பெரியவர்களாகின்ற போது விருட்சமாக வளர்ந்து மிகப் பெரிய மரமாகிறது.

குழந்தைகளிடம் தன்னம்பிக்கை வளராமல் போவதற்கு என்ன காரணம் என்று யோசிக்க வேண்டும். பரிணாம ரீதியாகவே குழந்தை வளர்கின்றபோது, எதையும் தானே செய்ய வேண்டும் என்கிற முனைப்பு அதனுடன் கூடவே சேர்ந்து வளர்கிறது.

ஆனால் குழந்தைகளைக் கண்டிப்புடனும், கட்டுப்பாட்டுடனும் வளர்க்க வேண்டும் என்கிற நோக்கத்தில் பெற்றோர்கள் குழந்தையின் சுதந்திரமான செயல்பாடுகறுக்குத் தடைபோட்டு விடுகிறார்கள். எதைச் செய்ய வேண்டும் என்று சொல்வதைவிட, எதைச் செய்யக் கூடாது என்று சொல்வதுதான் பெரியவர்களிடம் அதிகமாக இருக்கிறது.

ஆழமான விளைவுகளைப் பற்றிப் பெற்றோர்கள் சிந்திப்பதே இல்லை. தங்கள் குழந்தைகளுக்குப் பாதுகாப்பு கொடுப்பதாகப் பெற்றோர்கள் நினைத்துக் கொள்கிறார்கள். உண்மையில் அந்தக் குழந்தைகள் பெரியவர்களாகின்றபோது பாதுகாப்பற்ற நிலையினையே உணர்கிறார்கள். தங்களுடைய திறமையில் அவர்களுக்கு நம்பிக்கை வருவதில்லை.

குழந்தைப் பருவத்தில் விதிக்கப்பட்ட தடை உத்தரவுகள் அனைத்தும் ஆழ்மனப் பதிவுகளாகி, நம்மால் முடியாது என்கிற அவநம்பிக்கையினைத் தோற்றுவித்து விடுகின்றன. சரி சிந்தனைக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கலாம்.

குழந்தைப் பருவத்தில் எந்த ஒரு காரியத்தையும் குழந்தைகள் சிந்திக்காமல் செய்வதில்லை. காரணம் சிந்தனைகள் உருவாகி வளர்கின்ற பருவம் இது. உதாரணமாக குழந்தைகள் எதைப் பார்த்தாலும் சிந்திக்கத் தொடங்குகின்றன.

ஒரு பொருளைப் பார்த்தவுடன் அதனால் கவரப்பட்டு அதைத் தொட்டுப் பார்த்து உணர ஆசைப்படுகிறது. இதெல்லாம் சங்கிலித் தொடர் போன்ற சிந்தனை வளையங்களின் விளைவு. குழந்தைகளிடம் சிந்தனைப் பரிணாமம் இப்படித்தான் உருவாகிறது. செயல்கள் சிந்தனையால் உந்தப்படுகின்றன. சிந்தனை இல்லாமல் செயல் இல்லை

No comments:

Post a Comment